வீண் விளம்பரத்திற்காக நாடகமாடிய இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் கைது

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (09:56 IST)
சோழவரம் அருகே வீண் விளம்பரம் தேட, தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தனது காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் தன் காரின்மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், இதில் அதிர்ஷ்டவசமாக தானும் தன் நண்பர்களும் உயிர் பிழைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த விபத்தில் தனது கார் முற்றிலுமாக சேதமடைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து வழக்குபதிந்து போலீஸார் விசாரணை செய்ததில், காளிகுமார் சொன்னவாறு அப்படிப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை என்றும் விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments