Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீண் விளம்பரத்திற்காக நாடகமாடிய இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் கைது

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (09:56 IST)
சோழவரம் அருகே வீண் விளம்பரம் தேட, தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தனது காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் தன் காரின்மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், இதில் அதிர்ஷ்டவசமாக தானும் தன் நண்பர்களும் உயிர் பிழைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த விபத்தில் தனது கார் முற்றிலுமாக சேதமடைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து வழக்குபதிந்து போலீஸார் விசாரணை செய்ததில், காளிகுமார் சொன்னவாறு அப்படிப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை என்றும் விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments