இந்து துறவி பேரவையினர் வெங்கடேசன் எம்பியை,கைது செய்ய புகார் மனு!

J.Durai
செவ்வாய், 9 ஜூலை 2024 (10:11 IST)
நாடாளுமன்றத்தில்,மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும் , மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
 
மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம்  புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
துறவியர் பேரவை  வழங்கிய மனுவில், மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல் பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளுமன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த புகார் மனுவை  மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments