Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்! - த.வா.க வேல்முருகன்!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (11:24 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜக, பாமக, அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அண்ணா பல்கலை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பேசியுள்ளார். “யார் அந்த சார்? என்பது குறித்து ஆளுநர் வாய் திறக்கவில்லை. பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு பல்கலை.யின் வேந்தராக உள்ள ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். தமிழகம் கடந்த 2 வாரங்களில் போராட்ட களமாக மாறியுள்ளது. காவல்துறையும், முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments