Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் நதி நீர்…என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்… கமல்ஹாசன் கவிதை

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:17 IST)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் என்பதால் பல்வேறு சினிமா பிரபலங்களும், பாடலாசிரியர்களும், கவிஞர்களும்,  ரசிகர்களும் கவிஞரின் பிறந்த தினத்தை சிறப்பாய் கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவரும்,  பன்முக ஆற்றல் கொண்டவருமான  நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
அதில்,

’’அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும், என்றும்
ஓடும்
நதி நீர்.
என் அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.’’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments