Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் நதி நீர்…என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்… கமல்ஹாசன் கவிதை

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:17 IST)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் என்பதால் பல்வேறு சினிமா பிரபலங்களும், பாடலாசிரியர்களும், கவிஞர்களும்,  ரசிகர்களும் கவிஞரின் பிறந்த தினத்தை சிறப்பாய் கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தில் தலைவரும்,  பன்முக ஆற்றல் கொண்டவருமான  நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
அதில்,

’’அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும், என்றும்
ஓடும்
நதி நீர்.
என் அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.’’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments