Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வீரனின் போர் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடியை குறிப்பிட்டு ரஜினிகாந்த் ட்வீட்!

Advertiesment
Operation sindoor

Prasanth Karthick

, புதன், 7 மே 2025 (11:11 IST)

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக தலைவர்களும், இந்திய அரசியல் தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் ரஜினிகாந்த், இந்த போரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் “ஒரு போராளியின் போர் தொடங்கிவிட்டது. வெற்றிபெறும் வரை இதை நிறுத்தவேண்டாம். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் துணை நிற்கிறது பிரதமர் மோடி. ஜெய்ஹிந்த்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்களும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!