Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

J.Durai
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:46 IST)
திருப்பூரில் இருந்து பெருமாநல்லூருக்கு சென்ற அரசு பேருந்தை டிரைவா் சதாசிவம் என்பவர் ஓட்டி வந்தார்.
 
அப்போது அவர் ஒரு கையில் போன், மறு கையில் ஸ்டீயரிங் என நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
 
ஒரு நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் அதிர்ச்சியடைந்த பயணி ஒருவா் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பியதுடன் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தார். 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
 
இதையடுத்து டிரைவர் சதாசிவத்தை போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் சிவக்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments