Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக உயர்நிலைக் குழு கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (15:27 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து வரும் டிசம்பர் 29ம் தேதி திமுக உயர்நிலைக் குழு கூடுகிறது. 
ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான தினகரன் இமாலய வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கிட்டத்தட்ட தினகரன் பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் பெற்றுள்ளார். திமுக சார்பில் நின்ற மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இதுகுறித்து பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆர்கே நகரில் தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது எனக் கூறினார். 
 
இதனையடுத்து திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்ணா அறிவாலயத்தில் வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும்  கூட்டத்தில்,  கட்சி நிர்வாகிகள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments