Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு சிறையில் இருந்து சசிகலா வாழ்த்து

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (15:10 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு சசிகலா சிறையில் இருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் எதிர்பார்க்காத அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் உயர்மட்ட குழு அறிவித்தது.
 
தேர்தல் அதிகாரியிடம் இருந்து டிடிவி தினகரன் வெற்றிப்பெற்ற சான்றிதழை பெற்று வீடு திரும்பிய தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவை தொடர்பு கொண்டு வெற்றிப்பெற்றதை தெரிவித்துள்ளார். சசிகலா மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தன்னை இப்போது பார்க்க பெங்களூர் சிறைக்கு வரவேண்டாம் என்றும் சசிகலா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments