Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் ...வேளாங்கண்ணியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:30 IST)
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்  15 வயது  சிறுமியை 4 நாட்களாக ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 கொடூரர்களை போலீஸார் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள  காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என  15  வயது சிறுமியின் தாய் புகார் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சிறுமியை ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியை  பத்திரமாக மீட்டனர்.
 
அதன் பின்னர் சிறுமி பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கடத்திய குற்றவாளிகளை தேடி வந்தனர்.விசாரணையில்  நாகையைச் சேர்ந்த நீலகண்டன், அரவிந்த், குப்புசாமி ஆகியோர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் வைத்து 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதனைதொடர்ந்து மூன்று பேர் மீதும், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

அடுத்த கட்டுரையில்