Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் ...வேளாங்கண்ணியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:30 IST)
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்  15 வயது  சிறுமியை 4 நாட்களாக ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 கொடூரர்களை போலீஸார் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள  காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என  15  வயது சிறுமியின் தாய் புகார் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சிறுமியை ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியை  பத்திரமாக மீட்டனர்.
 
அதன் பின்னர் சிறுமி பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கடத்திய குற்றவாளிகளை தேடி வந்தனர்.விசாரணையில்  நாகையைச் சேர்ந்த நீலகண்டன், அரவிந்த், குப்புசாமி ஆகியோர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் வைத்து 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதனைதொடர்ந்து மூன்று பேர் மீதும், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்