Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் ட்ராஃபியே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கு.. அவ்ளோ சொகுசு! - தென்னாப்பிரிக்க வீரர் கருத்து!

Prasanth Karthick
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (08:32 IST)

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா வெற்றி பெற சாதகமான சூழல்கள் உள்ளதாக தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டுசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற அணிகள் இந்திய போட்டிக்கு துபாயிலும், மற்ற போட்டிகளுக்கு பாகிஸ்தானிலும் சென்று விளையாட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றிப் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் டுசன் “இந்திய அணி ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது என்பது அதற்கு சாதகமான சூழல்தான். இதை புரிந்துக் கொள்ள ராக்கெட் விஞ்ஞானியாக இருந்தாக வேண்டிய அவசியமில்லை” என விமர்சித்து பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments