Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-க்கு நிர்மலா சீதாராமன் ஏன் உதவினார் தெரியுமா? - டிடிவி பகீர் தகவல்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (16:07 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதாரரை மதுரை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வர நிர்மலா சீதாராமன் உதவி செய்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்-ஸின் சகோதரர் பாலமுருகனை மதுரை அப்போலோவிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்ற, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விவகாரத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக ஓ.பி.எஸ் கூறி விட, தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் தன்னை சந்திக்க வந்த ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் “ நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்து வருகிறார்கள். மக்களை முட்டாள்கள் என நினைத்தால் தேர்தலின் போது மக்கள் பாடம் கற்றுக்கொடுப்பார்கள். 
 
இதை விட பெரிய காமெடி என்னவெனில், தமிழகத்தின் முதல்வராக நிர்மலா சீதாராமனை அமர்த்த பாஜக திட்டமிட்டு வருகிறது. எனவேதான், ஓ.பி.எஸ்-க்கு அவர் உதவி செய்துள்ளார்” என அதிரடியாக பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments