Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: குவிந்த மக்கள்!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (08:36 IST)
குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுவதயொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர்.

ஆயிரத்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சோழ பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் தமிழகத்தின் புராதாண பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழாவானது சில காரணங்களால் 2006ல் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது.

குடமுழுக்கை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் தஞ்சாவூர் வருவதால் பெரிய கோவில் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் வருபவர்கள் அங்கிருந்து பெரிய கோவிலுக்கு இயக்கப்படும் இலவச பேருந்துகளில் ஏறி பெரிய கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு ராஜகோபுர குடமுழுக்கு நடைபெற இருப்பதால் மக்கள் கூட்டம் காலையிலேயே அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments