Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை குடமுழுக்கு விழா: பிரபல இயக்குனர் கைது!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (08:32 IST)
தஞ்சை பெரிய கோவிலில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை குடமுழுக்கு விழாவில் தமிழில் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இயக்குனர் கௌதமன் போராட்டம் செய்ய தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் தஞ்சை அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்ற பகுதியில் இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். அவருடன் மோகனசுந்தர அடிகள், ரகுநாதன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தஞ்சையில் சமஸ்கிரத மொழியில் குடமுழுக்கு விழா மந்திரம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கௌதமன் உள்பட ஒருசில உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
முன்னதாக தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் இயக்குனர் கௌதமன் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தஞ்சையில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யலாம் என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments