Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து பலி! – தஞ்சாவூரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்கு செலுத்த வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளை வரிசையில் காத்திருக்க செய்யாமல் உடனடியாக வாக்கு செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாபநாசம் தொகுதிகுட்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் வயதான அர்ஜுனன் என்ற முதியவர் வாக்கு செலுத்த வந்துள்ளார்.

வாக்கு செலுத்தி விட்டு திரும்புகையில் வாக்குசாவடியிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments