Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டமாய் சேர்ந்து வெளுக்குறாய்ங்களே! – வைரலாகும் கொரோனா விருந்து!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (10:41 IST)
கொரோனா பாதிப்புகளை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி வரும் நிலையில் தஞ்சாவூரில் இளைஞர்கள் கூடி விருந்து நடத்தி கொண்டாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றி திரிவதை தவிர்க்குமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இளைஞர்கள் பலர் அரசின் அறிவுறுத்தல்களை செவி மடுக்காமல் தங்கள் விருப்பம் போல பொழுதை கழித்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் காட்டுக்குள் கேரம் போர்டு விளையாடிய இளைஞர்கள் போலீஸின் ட்ரோனை கண்டதும் தெறித்து ஓடிய சம்பவம் இணையத்தில் வைரலானது.

அதை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த கறி விருந்து தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் அருகே கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காட்டுக்குள் கறி சமைத்து விருந்து நடத்தியதோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து இந்த விருந்தை நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிப்பு: தவெக அறிவிப்பு..!

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

அசைவம் சாப்பிட்டதுக்கு இந்தா இருக்கு ஆதாரம்.. பதவி விலகுங்க! - நவாஸ் கனிக்கு அண்ணாமலை பதில்!

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments