பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் கொரோனா! – அதிர்ச்சியில் தஞ்சாவூர்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (12:12 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஆலத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

100க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 2 வாரம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்ட கல்லூரிகளிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கும், கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments