Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செத்த பாம்பு... முன்னாள் லெஃப்ட் ஹாண்ட் பேசிய பேச்சால் தினகரன் அப்செட்!

செத்த பாம்பு... முன்னாள் லெஃப்ட் ஹாண்ட் பேசிய பேச்சால் தினகரன் அப்செட்!
, திங்கள், 22 ஜூலை 2019 (13:02 IST)
திமுகவில் இணைந்துள்ள தங்க தமிழ்செல்வன் டிடிவி தினகரனை செத்த பாம்பு என விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
டிடிவி தினகரன் அமமுகவை உருவாக்கிய போது அவருக்கு ரைட் ஹாண்டாக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி, அதே போல் லெஃப்ட் ஹாண்டாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். இபோது இருவரும் திமுகவில் இணைந்துவிட்டனர். 
 
செந்தில் பாலாஜி பெரிதாக எந்த பிரச்சனையும் மேற்கொள்ளாமல் சைலெண்டாக திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.எல்.ஏ ஆகிவிட்டார். ஆனால் தங்க தமிழ்செல்வன், தினகரனை பற்றி சில பல விமர்சனங்களை முன்வைத்து பின்னர் திமுகவில் இணைந்தார். 
webdunia
இந்நிலையில் சமீபத்தில் தங்க தமிழ்செல்வன் தினகரன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்செல்வன் கூறியதாவது, அதிமுகவில் நான் இருந்த போது பாராளுமன்ற தேர்தலில் 6000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனேன். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என அதைவிட்டு வெளியேறினேன். 
 
அதன் பின்னர் அமமுக எனும் டிடிவி தினகரன் வழிநடத்திய கட்சியில் பயணித்தேன். ஆனால் மக்கள் அந்த கட்சியை விரும்பவில்லை, ரசிக்கவில்லை. செத்த பாம்பை அடிக்க கூடாது என சொல்லுவார்கள். எனவே நான் கட்சியை பற்றியும் அவரை பற்றியும் பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 
 
தங்க தமிழ்செல்வனின் இந்த பேச்சு அமமுகவினர் மத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”அத்திவரதரை குளத்தில் மீண்டும் வைக்ககூடாது”.. ஜீயர் எச்சரிக்கை