Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது: அழைப்பு குறித்து தங்க தமிழ்செல்வன்!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (18:59 IST)
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30 ஆம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளனர். 
 
விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து தினகரன் பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
 
இது குறித்து தினகரன் அதரவாளர் தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது, இந்த அழைப்பு கேலி கூத்தானது. இந்த அழைப்பின் மூலம் அதிமுகவோடு இணைய வாய்ப்பே இல்லை. அப்படியே அதிமுகவில் இணைய வேண்டும் என்றாலும், அங்கு உள்ள சில தலைகள் வெளியேறிய பின்னர்தான் இணைப்பு நடக்கும். 
 
அதிமுகவின் 90% ஆதரவாளர்கள் எங்களோடுதான் உள்ளனர். எனவே, அங்கு மீதமுள்ளவர்கள் வேண்டுமானால் எங்களோடு வந்து இணையட்டும். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது அதனால்தான் இந்த இணைப்புக்கான அழைப்பு எல்லாம் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments