Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு காரணம் பா.ஜ.க மட்டுமில்லாமல் காங்கிரஸ் தி.மு.க.வும் தான்: தம்பிதுரை

ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு காரணம் பா.ஜ.க மட்டுமில்லாமல் காங்கிரஸ் தி.மு.க.வும் தான்: தம்பிதுரை
, புதன், 18 ஜனவரி 2017 (14:56 IST)
அ.தி.மு.க கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையடுத்து கரூர் நகர அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.


 

மேலும் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிய போது, என்ன தான் குழப்பம் நீடிக்க நினைத்தாலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும்., புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் உருவாக்கிய இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை புரட்சித்தலைவி ஜெயலலிதா மூலமாக எண்ணற்ற திட்டங்களை தீட்டினார்.

காளையை பட்டியலில் யார் சேர்த்தது?. 2004 ம் வருடம் தி.மு.க ஆட்சி காலத்தில் காட்சிபடுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்த அக்கட்சி, தற்போது போராடுகின்றதே?, மேலும் அந்த பட்டியலில் சேர்த்த விவகாரம் குறித்து மோடி அரசு பரிசீலனை செய்திருக்க வேண்டும், ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இது தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்று பலமுறை கடிதம் எழுதினார்கள். தற்போது ஜல்லிக்கட்டிற்கு குழப்பம் நீடிப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் நிலவும் குழப்பத்தை தீர்த்து வைக்காமல் வேடிக்கை பார்க்கின்றது என்றார்.

கரூரிலிருந்து ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கார்கில் போர் வீரப்பதக்கத்தை அரசிடம் திருப்பிக்கொடுத்த முன்னாள் ராணுவ வீரர்!