Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டும் தைப்பூச திருவிழா..! முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..!

Senthil Velan
வியாழன், 25 ஜனவரி 2024 (12:26 IST)
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 
 
தைப்பூச திருவிழா இன்று தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்களில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.  மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார்.
 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து, காவடி எடுத்து வந்து இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் அதிக அளவு குவிந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
 
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலிலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தைப்பூசம் முருகப்பெருமானுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

ALSO READ: தேர்தலில் நடிகர் விஜய் தனித்து போட்டியா? மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை..!!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments