Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தை அமாவாசை: முன்னோர்களை வழிபட்டு வரும் பொதுமக்கள்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:22 IST)
இன்று தை அமாவாசை: முன்னோர்களை வழிபட்டு வரும் பொதுமக்கள்!
இன்று தை அமாவாசை நாளை அடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் பொது மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று கன்னியாகுமரி, ராமேஸ்வரம், குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொது மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர் 
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது சிறந்தது ஒன்றாக கருதப்பட்டாலும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசையில் மூதாதையர்களை வணங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல் ஆறு ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்தும், திதி தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டு வரும் தமிழக மக்கள் இன்றும் அதே போல் தர்ப்பணம் செய்து வருகின்றனர்
 
ஒரு சிலர் வீட்டிலேயே தர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இல்லாதவர்கள் மட்டுமே அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும், முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்தால் நம்முடைய பரம்பரைக்கே நல்லது என்றும் ஒரு ஐதீகமாக உள்ளது. இன்று தை அமாவாசை வழிபாட்டிற்கான சிறந்த நேரம் காலை 10.30 மணி முதல் 11.30 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments