Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி திறந்து 10 நாள்… புத்தகம் எங்கே !- பெற்றோர்கள் அதிருப்தி !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (09:04 IST)
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் 3,4,5 ஆகிய வகுப்புகளுக்குப் புத்தகங்கள் தரப்படவில்லை எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளித் திறக்கும் அன்றே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால் 10 நாட்கள் ஆகியும் 3,4,5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு இன்னமும் பாடப்புத்தகம் வழங்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கான புத்தகங்களை இன்னும் அச்சடிக்கும் பணியே முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டதால் அதற்கான வடிவம் கடந்தமாதம்தான் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவே இந்த தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments