Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 31ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (16:43 IST)
ஜூலை 31ஆம் தேதி தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 
 
ஜூலை 31ஆம் தேதி ஆடித்தவசு திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
 மேற்கண்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சமந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மேற்கண்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று மேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments