Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலில் தற்காலிக கூரை.

J.Durai
சனி, 4 மே 2024 (15:45 IST)
கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 103 டிகிரி என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும்  இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 
 
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோவை நெடுஞ்சாலை  கவுண்டம்பாளையம்-கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது
 
பச்சை நிற துணியால் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் சிக்னலில் நிற்கும் பொழுது அதிக அளவிலான வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலில் தற்போது மாநகராட்சி சார்பில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிழற்குடை இது என்னும் நிலையில் இதே போன்று அனைத்து சிக்னல்களிலும் அமைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என  வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments