Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறதா? மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (16:40 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் அடுத்தகட்ட தளர்வாக வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது
 
ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அதனை செயல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது குறித்து அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை செய்து வருகிறார். வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அதாவது தனிமனித இடைவெளி, வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்தல், வழிபாட்டு தலங்களில் கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த ஆலோசனையை அடுத்து வரும் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments