Publish Date: Wed, 29 Sep 2021 (08:37 IST)
Updated Date: Wed, 29 Sep 2021 (08:42 IST)
வார இறுதி நாட்களான வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதாக அறிவித்துள்ளார். நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள வரும் அக்டோபர் மாதம் முழுவதும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் திரையரங்குகள் பேருந்துகள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் தடை ஏன் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்
பொதுமக்களின் அதிருப்தி காரணமாக விரைவில் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்க பண்ணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது