Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

Advertiesment
பாலியல் தொந்தரவு

Mahendran

, திங்கள், 9 ஜூன் 2025 (10:54 IST)
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரியில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் தியாகராஜன் என்பவர், அதே கோவிலில் தூய்மை பணி செய்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
 
இதனை அடுத்து, தூய்மை பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் தியாகராஜன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.
 
அதைத் தொடர்ந்து, போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் பணியிலிருந்து அவரை நீக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!