தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை: தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (07:34 IST)
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசியுள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணிகளுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சோமன்னா போட்டியிடும் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தேஜஸ்வி சூரியா, சோமண்ணா இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் சித்தாராமையா தோற்கடிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 
 
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் சித்தாராமையா போட்டியிடும் தொகுதியில் தான் சோமண்ணா போட்டியிடுகிறார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்ணாமலையை அறிமுகப்படுத்தி பேசிய தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறியதை அடுத்து கரகோஷம் எழுந்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

மோந்தா புயல்: சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்கான மழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments