Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (07:27 IST)
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை மாநில சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நிலையில் அவர் கீழ் பணியாற்றி உள்ள காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கட்சிக்கு தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்க நிலையில் அந்த பணியை அவர் ஆற்ற கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments