Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகார்..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (07:27 IST)
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை மாநில சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நிலையில் அவர் கீழ் பணியாற்றி உள்ள காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி கட்சிக்கு தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்க நிலையில் அந்த பணியை அவர் ஆற்ற கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments