Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் புயலாக உருமாறுகிறது “தேஜ்”! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:27 IST)
அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் தற்போது சூப்பர் புயலாக வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தென்மேற்கு பருவமழை காலம் முடிய உள்ள நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு தேஜ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் தேஜ் புயல் தற்போது சூப்பர் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அக்டோபர் 24ல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. ஒரே சமயத்தில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரு பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments