Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கழிப்பறை இல்லாததால் இளம்பெண் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (15:43 IST)
கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்ர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரம்யயா( 27). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் புது நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரது பெற்றோர்ன் சம்மதத்தின் பேரில் கடந்த மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து காத்தியின் வீட்டிற்குச் சென்ற ரம்யா, அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் மறு நாளே அவர் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

பின்னர், வேறு வீட்டு பார்த்து குடியேறலாம் என்று கூறி ரம்யாவை அழைத்துச் சென்ற கார்த்தி திரும்பவும் தன் பழைய வீட்டிலேயே இருக்க வைத்துள்ளார். அங்கு கழிப்பறை கட்ட முயற்சி எதுவும் அவர் எடுக்கவில்லை என்பதால் ரம்பாவுக்கும் கார்த்திக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கு இடையே வாக்குவாதம் முற்றி வந்த நிலலையில் மனமுடைந்த ரம்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்டார்.

அவரை  மீட்ட வீட்டில் உள்ளோர், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூரி கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments