Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் கழிப்பறை இல்லாததால் இளம்பெண் தற்கொலை !

வீட்டில் கழிப்பறை இல்லாததால் இளம்பெண் தற்கொலை !
, செவ்வாய், 10 மே 2022 (15:43 IST)
கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்ர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரம்யயா( 27). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் புது நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரது பெற்றோர்ன் சம்மதத்தின் பேரில் கடந்த மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து காத்தியின் வீட்டிற்குச் சென்ற ரம்யா, அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் மறு நாளே அவர் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

பின்னர், வேறு வீட்டு பார்த்து குடியேறலாம் என்று கூறி ரம்யாவை அழைத்துச் சென்ற கார்த்தி திரும்பவும் தன் பழைய வீட்டிலேயே இருக்க வைத்துள்ளார். அங்கு கழிப்பறை கட்ட முயற்சி எதுவும் அவர் எடுக்கவில்லை என்பதால் ரம்பாவுக்கும் கார்த்திக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கு இடையே வாக்குவாதம் முற்றி வந்த நிலலையில் மனமுடைந்த ரம்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்டார்.

அவரை  மீட்ட வீட்டில் உள்ளோர், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூரி கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாஜ்மஹால் இந்து கோவில் விவகாரம்; வழக்கு ஏற்கப்பட்டதால் லட்டு வழங்கி கொண்டாட்டம்!