Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு சூடு வைத்த ஆசிரியைகள்....போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:39 IST)

1ஆம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   

சென்னை வியாசர்பாடி தாமோதரன் தெருவைச் சேர்ந்தவர் திவ்வா(27). இவரது மகள்(6 வயது) மன வளர்ச்சி குன்றியதாகத் தெரிகிறது. சிறுமி பெரம்பூர் சாலையில் உள்ள கல்கி ரங்க நாதன் மான்போர்ட் ஸ்பெஷல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிறுமியை அழைத்துப்போக அவரது தந்தை பள்ளி வந்துள்ளார். அப்போது, சிறுமியில் கை, கால்களில் காயம் இருக்கிறது.  ஏன் இந்த நிலையில் சிறுமியை பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என  கேட்டுள்ளார்.

காலையில்  பள்ளியில் விடும்போது, சிறுமி நன்றாக இருந்தார் என சிறுமியின் தந்தை கலைச்செல்வன் ஆசிரியர்களிடம் வாதிட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் திவ்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார்.

எனவே, போலீஸார் விசாரணை நடத்தி,  சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தற்போது ஆசிரியைகளிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திலும் ஊழல்.. மனு அளிக்க வரும் மக்கள் அவதி: தமிழிசை

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments