Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைக்கப்படுகிறதா? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Webdunia
வியாழன், 20 மே 2021 (21:32 IST)
ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன இருந்தாலும் ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சம்பளம் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும் என  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments