Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
, வெள்ளி, 13 மே 2022 (19:27 IST)
வரும் மே மாதம் 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை  ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில் ,1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில் ஆசிரியர்கள் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு  வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவலர் சார்ந்த பணிகளை கவனிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வா? அன்புமணி கண்டனம்