பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (08:15 IST)
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு நடைபெறும் என்றும், அதற்கு நவம்பர்1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,582 ஆக உயா்த்தி இருப்பதால் விண்ணப்பிக்கும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இதன்படி   பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்ற நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மாநகராட்சியில் 86 பணியிடங்கள், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144 பணியிடங்கள், , தொடக்கக் கல்வித் துறையில் 78 பணியிடங்கள், என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments