Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வகுப்பறையிலே மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்: சென்னையில் நடந்த கொடூரம்!

வகுப்பறையிலே மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்: சென்னையில் நடந்த கொடூரம்!

வகுப்பறையிலே மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்: சென்னையில் நடந்த கொடூரம்!
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:20 IST)
சென்னை அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 40 வயதான ஆசிரியர் ஒருவர் பலவந்தமாக பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சீனிவாசன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது மாணவிகளிடம் வரம்பு மீறி நடந்துவந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஆசிரியர் சீனிவாசன் மாணவி அனுஷாவை பொய்யான காரணம் ஒன்றை கூறி வகுப்பறையில் இருந்து தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் யாரும் இல்லாமல் காலியாக இருந்த ஒரு வகுப்பறைக்கு அழைத்து மாணவி அனுஷாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சீனிவாசன்.
 
இது குறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதால் மாணவி பயத்தில் யாரிடமும் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி மயங்கி விழுந்ததையடுத்து அவரை உடனடியாக பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என கூற பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதிரடியாக ஆசிரியர் சீனிவசனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 மாணவிகளை இந்த ஆசிரியர் சீரழித்தது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடும்பு ரத்தம் ரூ.5000: சென்னையில் அமோக விற்பனை