Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடும்பு ரத்தம் ரூ.5000: சென்னையில் அமோக விற்பனை

உடும்பு ரத்தம் ரூ.5000: சென்னையில் அமோக விற்பனை
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:16 IST)
சென்னையில் நரிக்குறவர்கள் சிலர் உடும்புகளை உயிருடன் அதன் கழுத்தை அறுத்து வெளிவரும் ரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர்.


 

 
சென்னை கே.கே.நகர் பகுதியில் உடும்பு ரத்தத்தை ரூ.5000 ஆயிரம் கொடுத்து வாங்கி தண்ணீருடன் சேர்த்து குடித்துவிட்டு செல்கின்றனர். இந்த ரத்தத்தால் உடல் வலிமை, ஆண்மை அதிகரிப்பு, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, போன்றவற்றிற்கு சிறந்தது என்று தெரிவிக்கின்றனர்.
 
உடும்பு ரத்தம் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விற்பனை செய்த நரிக்குறவர்களை தேடி வருதாக தனியார் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.
 
நரிக்குறவர்கள் விற்பனை செய்து வந்த உடும்பு ரத்தத்தை ஏராளமானோர் வாங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உடும்பு என்றால் அனைவரும் விருப்பத்துடன் உண்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’காதலிக்கும் ஆண்கள் திருநங்கைகளை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்துகின்றனர்’ - பிரியா பாபு உருக்கம்