Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலம் அருகே 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

சேலம் அருகே 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
, வெள்ளி, 1 ஜூலை 2016 (11:15 IST)
சேலம் மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


 


 
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த் வெள்ளாள குணடம் கிராமத்தைச் சேர்ந்தவரின் 6 வயது மகள் திருமானூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் அவக்ய்ப்ப்பு படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.
 
அதுபோல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பியபோது மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். அதனால் அவரது பெற்றோர்கள் அந்த மாணவியிடம் விசாரித்த போது அவர் பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியரால் மதிய உணவு இடைவேளையின்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
 
அதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியத்தில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடு விட்டு கூடு பாய முயற்சி செய்த இரு வாலிபர்கள் மர்ம மரணம்