நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் மூட உத்தரவு!!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (12:33 IST)
நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு. 

 
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா 10 ஆம்  தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின் புறம் உள்ள  2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாக தீபமும் ஏற்றப்படுகிறது. 
 
இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளதால் டாஸ்மாக் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments