Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!

டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!
, வியாழன், 2 ஜூலை 2020 (11:43 IST)
ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி ஞாயிறும், 28 ஆம் தேதி ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், டாஸ்மாக்குகள் ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயங்காது என்று அரசு தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாக்குதல் நடத்துனோமா? எங்க? புரளிகளை அள்ளிவிடும் சீன ஊடகங்கள்!