Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது.! குடிப்பவர்களை குறைக்க வேண்டும்.! அமைச்சரின் மாஸ்டர் பிளான்.!!

Muthusamy

Senthil Velan

, வியாழன், 11 ஜூலை 2024 (17:48 IST)
டாஸ்மாக் கடைகளை தற்போது குறைக்க முடியாது என்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது உடனடியாக செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்று கூறினார்.
 
மேலும் செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 
விக்கிரவாண்டி தேர்தலில் 63% ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும், அதைவிட கூடுதல் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் 12 கிராம் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்!