Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் சரக்கு திருடிய டாஸ்மாக் ஊழியர்: கைது செய்த போலீஸார்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:28 IST)
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியர் ஒருவரே மதுபானங்களை திருடி விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இரண்டு நாட்கள் திறக்கப்பட்டுவிட்டு மீண்டும் மூடப்பட்டதால் பிறகு வாங்கி கொள்ளலாம் என அலட்சியமாக இருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி துவாக்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் தான் பணிபுரியும் டாஸ்மாக் கடையிலிருந்தே மது பாட்டில்களை திருடி வெளியே அதிக விலைக்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மேற்பார்வையாளர் கார்த்திக்கேயனை கைது செய்ததுடன், விற்றது போக அவரிடம் எஞ்சியிருந்த 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments