Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு: நீலகிரியில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:24 IST)
நீலகிரியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தலாடி என்ற பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் இருவர்  முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அடைந்த காவல் துறையினர் உடனடியாக சென்று கொள்ளையனை பிடிக்க முயன்ற போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது 
 
மேலும் கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் மீது கத்தியால் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் காயமடைந்த கொள்ளையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளையன் பெயர் மணி என்று அறியப்பட்டது. இந்த நிலையில் காயம் அடைந்த கொள்ளையன் மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக வலை வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments