Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு: நீலகிரியில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:24 IST)
நீலகிரியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தலாடி என்ற பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் இருவர்  முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அடைந்த காவல் துறையினர் உடனடியாக சென்று கொள்ளையனை பிடிக்க முயன்ற போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது 
 
மேலும் கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் மீது கத்தியால் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் காயமடைந்த கொள்ளையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளையன் பெயர் மணி என்று அறியப்பட்டது. இந்த நிலையில் காயம் அடைந்த கொள்ளையன் மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக வலை வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments