தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! – சிபிஐ விசாரிக்க உத்தரவு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (12:21 IST)
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பள்ளியில் படித்து வந்த அரியலூரை சேர்ந்த +2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி லாவண்யா தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததே காரணம் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அப்படியான எந்த வாக்குமூலமும் மாணவி அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments