Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தர்கள் கடும் எதிர்ப்பால் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (08:39 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட உத்தரவிட்டது. இதனை அடுத்து கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றில் வழிபாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தஞ்சை கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் பெரிய கோவிலை பூட்டியது தவறு என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக கோவில் நிர்வாகம் தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களை அனுமதித்து வருகிறது. இருப்பினும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments