Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் குடும்பமே இப்படித்தான்.. பொங்கி எழும் தமிழிசை

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:10 IST)
ப சிதம்பரத்தை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சர்ச்சையான கருத்தை பேசியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ப சிதம்பரத்திற்கு ஆகஸ்து 28 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முடிவில் ஆகஸ்து 29 வரை இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ப சிதம்பரத்தை குறித்து, வேலூரில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழிசை, ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் பெறப்பட்டது என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் பொருளாதார மேதை என கூறப்பட்ட ப சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வாங்கினார். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. அவர் இந்த நாட்டுக்கே பாரமாகத் தான் இருந்தார் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில், தவறு செய்பவர்கள் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப சிதம்பரத்திற்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது. அவருடைய குடும்பமே ஒரு ஜாமீன் குடும்பம் என குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments