Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் குடும்பமே இப்படித்தான்.. பொங்கி எழும் தமிழிசை

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:10 IST)
ப சிதம்பரத்தை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சர்ச்சையான கருத்தை பேசியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ப சிதம்பரத்திற்கு ஆகஸ்து 28 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முடிவில் ஆகஸ்து 29 வரை இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ப சிதம்பரத்தை குறித்து, வேலூரில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழிசை, ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் பெறப்பட்டது என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் பொருளாதார மேதை என கூறப்பட்ட ப சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வாங்கினார். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. அவர் இந்த நாட்டுக்கே பாரமாகத் தான் இருந்தார் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில், தவறு செய்பவர்கள் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப சிதம்பரத்திற்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது. அவருடைய குடும்பமே ஒரு ஜாமீன் குடும்பம் என குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments