Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வின் ஆட்சியின் போது அமைதி ; இப்போது என்ன சத்தம்? - தமிழிசை கேள்வி

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (10:38 IST)
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  


 
இந்நிலையில் ஜி.எஸ்.டி காட்சி உட்பட 4 காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.  4 காட்சிகளை நீக்கக் கோரி தணிக்கை வாரியத்திடம் 23 அல்லது 24 தேதி படகுழு கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில், தமிழிசை சவுந்தராஜன் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
சரியான திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை தவறாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது. விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் கூறப்படும் தவறான கருத்துகள் மக்களிடம் சுலபமாக சென்று சேரும். அதை தடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஜெயலலிதா இருந்த போது எத்தனையோ முறைகேடுகள் தமிழகத்தில் நடந்தன. அதையெல்லாம் பேசாதவர்கள் தற்போது ஏன் பேசுகிறார்கள்?. மத்திய அரசை விமசித்தால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதாலேயே இப்படி செய்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments