Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் வேலை செய்த தமிழக வாலிபர் மரணம்...

லண்டனில் வேலை செய்த தமிழக வாலிபர் மரணம்...
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (20:32 IST)
லண்டனில் வேலை செய்த, கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மரணமடைந்து 15 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் கரூர் வந்து அடைந்தது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் புதூர் அருகில் உள்ள ந.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் - கண்ணம்மாள் ஆகியோரின் மகன் கனகராஜ் (32 வயது ) பொறியியல் பட்டதாரி யான இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 26.08.2023 அன்று கனகராஜ் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. மகன் மரணம் அடைந்த சோகத்தில், செய்வது அறியாது தவித்தனர்.கனகராஜ் உடன் வேலை செய்த நண்பர்கள் மற்றும் வெளிநாடு தமிழர்கள் மூலம், இந்திய தூதரகம் துணையுடன் அவரின் உடல் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு,  நேற்று மதியம் 2 மணி அளவில் கரூர் பாலமாபுரத்தில் உள்ள மின் மயானத்திற்கு கனகராஜின் உடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.

கனகராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் திரண்டனர். கரூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து நன்றாக படித்து பொறியியல் பட்டதாரி ஆக பட்டம் பெற்று, லண்டனில் வேலை கிடைத்து, நம் குடும்பத்தை முன்னேற்றலாம் என்ற எண்ணத்தில் உழைத்த இளைஞரின், அகால மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் அதிகரிக்கும் மணற்கொள்ளை ...